தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை நடைமுறை

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை நடைமுறை

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை நடைமுறை


UPDATED : ஜூன் 19, 2026 08:58 PM

ADDED : ஜூன் 19, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2026 08:58 PM ADDED : ஜூன் 19, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை ஆண்டுதோறும், 'தமிழ்நாடு இன்ஜினியரிங் அட்மிஷன் (-டி.என்.இ.ஏ.,)' வாயிலாக நடைபெறுகிறது.

முதலில், மாணவர்கள் https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்று உட்பட தேவையான ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவ, மாணவியர், தங்களது சான்றிதழ்களை டி.எப்.சி., மையங்களில் சரிபார்ப்பதற்காக சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் பதிவேற்றிய ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன.

தர வரிசை வெளியீடு மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, தர வரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது. கணிதம், இயற்பியல், வேதியியல் மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பீடு நடைபெறும். பிரிவுகளுக்கு ஏற்ப, கல்லுாரிகளில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும்.

தரவரிசையின் அடிப்படையில், மாணவர்கள் சுற்றுவாரியாக அழைக்கப்படுவர்.

சுற்று 1: - முதல் தரவரிசை மாணவர்கள்.

சுற்று 2: முதல் வரிசைக்கு கீழ் உள்ள மாணவர்கள்.

சுற்று 3: கடைசி தரவரிசை மாணவர்கள்.

ஒவ்வொரு சுற்றுக்கும் தனி தேதி, நேரம் வழங்கப்படும்.

சாய்ஸ் பில்லிங் இது மிகவும் முக்கியமான கட்டம். இங்கே மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லுாரி மற்றும் பிரிவுகளை தங்களுடைய விருப்பப்படி வரிசைப்படுத்த வேண்டும். மாணவர்களின் விருப்பங்களின் எண்ணிக்கைக்கு வரம்பில்லை; எத்தனை விருப்பங்களை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.

மாணவர்கள் தங்கள் தரவரிசையை கருத்தில் கொண்டு விருப்பங்களை தேர்வு செய்ய வேண்டும். முக்கியமான கல்லுாரி/பிரிவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தரமான கல்லுாரிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது சிறந்தது. கடந்த 5 ஆண்டு கல்லுாரிகளின் கட்--ஆப் விபரங்கள் https://www.tneaonline.org/ இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

இறுதி ஒதுக்கீடு மாணவர்களின் தேர்வுகள் மற்றும் தரவரிசையின் அடிப்படையில் இறுதி ஒதுக்கீடு வழங்கப்படும்.

கல்லுாரி சேர்க்கை மாணவர் ஒரு இடத்தை உறுதிப்படுத்திய பின், அக்கல்லூரிக்கு நேரில் சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து சேர்க்கை பெறலாம். கவுன்சிலிங்கில் மாணவர்கள் தங்களது தரவரிசையை உணர்ந்து, சிந்தித்து, விருப்ப தேர்வுகளை செய்யும் பொழுதே சிறந்த முடிவுகளை பெற முடியும். 'சாய்ஸ் பில்லிங்' என்பது மிக முக்கியமான கட்டம் என்பதைக் கருத்தில் கொண்டு அதில் கவனத்துடன் ஈடுபட வேண்டும்.

விபரங்களுக்கு: https://www.tneaonline.org/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us