sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சுற்றுலா வழிகாட்டிகளை அங்கீகரிக்க திட்டம்:  தமிழக அரசு நடவடிக்கை

/

 சுற்றுலா வழிகாட்டிகளை அங்கீகரிக்க திட்டம்:  தமிழக அரசு நடவடிக்கை

 சுற்றுலா வழிகாட்டிகளை அங்கீகரிக்க திட்டம்:  தமிழக அரசு நடவடிக்கை

 சுற்றுலா வழிகாட்டிகளை அங்கீகரிக்க திட்டம்:  தமிழக அரசு நடவடிக்கை


ADDED : நவ 28, 2025 03:47 AM

Google News

ADDED : நவ 28, 2025 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: தமிழகத்தில், சுற்றுலா வழிகாட்டிகளை அங்கீகரித்து, மாவட்டந்தோறும் உள்ள சுற்றுலாத்துறை இணையதளத்தில் அவர்களின் பெயர் விபரத்தை பதிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், சுற்றுலா வழிகாட்டிகள், மூன்று பிரிவுகளாக செயல்படுகின்றனர். உள்ளூர், பிராந்தியம், மொழி திறன் சார் என, வழிகாட்டிகள் உள்ளனர்.

இவர்கள், சுற்றுலா பயணியருக்கு ஒரு குறிப்பிட்ட இடம் குறித்த தகவல்களையும், வழிகாட்டுதலையும் வழங்குகின்றனர்.

வரலாற்றுத் தளங்கள், அருங்காட்சியகங்கள், கலாசார மையங்கள் போன்ற இடங்கள் குறித்து விரிவான தகவல்களை அளிக்கின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில், தகுதியான சுற்றுலா வழிகாட்டிகளை அங்கீகரித்து, மாவட்டந்தோறும் சுற்றுலா சார்ந்த இணையதளத்தில் அவர்களின் பெயர் விபரத்தை பதிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பெரும்பாலான சுற்றுலா வழிகாட்டிகள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு, உரிய தகுதி மற்றும் அங்கீகாரத்தை பெற்றிருப்பர். அதன்படி, தமிழகத்தில், பெரிய அளவிலான புராதான கோவில்களில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளனர்.

இந்நிலையில், மாவட்டந்தோறும், சுற்றுலா வழிகாட்டிகளை பதிவு செய்ய அறிவுறுத்தி, உரிய பயிற்சி அளிப்பதுடன், பிரிவுகளின் அடிப்படையில் அவர்களின் பெயர் விபரம், மாவட்ட சுற்றுலாத்துறையின் இணையதளத்தில் பதிவிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, சுற்றுலா சார்ந்த பணியில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களுக்கும், சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் பங்களிப்போடு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us