sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாழை, ஜாதிக்காய் ஊடுபயிர் சாகுபடிக்கு இலக்கு; பாசன சபை கூட்டத்தில் தகவல்

/

வாழை, ஜாதிக்காய் ஊடுபயிர் சாகுபடிக்கு இலக்கு; பாசன சபை கூட்டத்தில் தகவல்

வாழை, ஜாதிக்காய் ஊடுபயிர் சாகுபடிக்கு இலக்கு; பாசன சபை கூட்டத்தில் தகவல்

வாழை, ஜாதிக்காய் ஊடுபயிர் சாகுபடிக்கு இலக்கு; பாசன சபை கூட்டத்தில் தகவல்


ADDED : செப் 23, 2024 10:50 PM

Google News

ADDED : செப் 23, 2024 10:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை : 'ஆனைமலையில், வேளாண்மையை நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்,' என, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் தெரிவித்தார்.

வேளாண்மையை நவீனப்படுத்தும் திட்டத்தின் முதற்கூட்டம், ஆனைமலை வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் நடந்தது. ஆழியாறு உபவடி நீர் பாசன சபை தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:

ஆனைமலை ஒன்றியத்தில், 2024 - 25ம் ஆண்டு தமிழ்நாடு பாசன வேளாண்மையை நவீனப்படுத்தும் திட்டமானது, ஆழியாறு உபவடி நீர் நிலை பகுதிகளான ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், காளியாபுரம், ஒடையகுளம், பெரியபோது, கோட்டூர், தென்சங்கம்பாளையம், மார்ச்சநாயக்கன்பாளையம், சோமந்துறைசித்துார் ஆகிய, ஒன்பது கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக வாழை மற்றும் ஜாதிக்காய் சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்படுகிறது. அதில், ஒரு ெஹக்டேர் ஜாதிக்காய் பயிரிடும் விவசாயிகளுக்கு, 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஜாதிக்காய் நாற்றுகள் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்பட உள்ளது.

வாழை சாகுபடிக்கு, ஒரு ெஹக்டேருக்கு, 26 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு திசு வாழைக்கன்றுகள் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்பட உள்ளது.இந்தாண்டு வாழை கன்று ஊடுபயிராக, 148 ெஹக்டேரும்; ஜாதிக்காய் ஊடுபயிராக, 209 ெஹக்டேரும்; நிலப்போர்வை நான்கு ெஹக்டேரும் இலக்காக பெறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், தோட்டக்கலைத்துறை அலுவலகத்துக்கு சிட்டா, அடங்கல், உரிமை சான்று, ஆதார் நகல், புகைப்படம், வங்கி புத்தக நகலுடன் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us