sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பாலித்தீன் கவர்களில் டீ சப்ளை; மக்களுக்கு நோய்கள் இலவசம்

/

பாலித்தீன் கவர்களில் டீ சப்ளை; மக்களுக்கு நோய்கள் இலவசம்

பாலித்தீன் கவர்களில் டீ சப்ளை; மக்களுக்கு நோய்கள் இலவசம்

பாலித்தீன் கவர்களில் டீ சப்ளை; மக்களுக்கு நோய்கள் இலவசம்


ADDED : பிப் 04, 2025 11:43 PM

Google News

ADDED : பிப் 04, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் சுற்றுச்சுழல் வெகுவாக பாதிக்கிறது.

வால்பாறையில், வனஉயிரினங்களை பாதுகாக்கும் வகையில், கடந்த, 11 ஆண்டுகளுக்கு முன், பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஆனால், நகராட்சி அதிகாரிகள் பிளாஸ்டிக் தடையை முறையாக கண்காணிக்காததால், சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் நிலையில், பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போது தமிழக அரசு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், அரசு அலுவலகம், அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை.

வால்பாறையில் உள்ள பெரும்பாலான, ேஹாட்டல்களில் பாலித்தீன் கவரில், டீ பார்சல் வழங்கப்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை அறியாமல் தொடர்ந்து பாலித்தீன் கவரில், சூடாக டீ வாங்கி வந்து குடிப்பதால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக, நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.






      Dinamalar
      Follow us