sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

லாரிகள் இடையே சிக்கிய கார்: ஆசிரியை பலி; 4 பேர் காயம்

/

லாரிகள் இடையே சிக்கிய கார்: ஆசிரியை பலி; 4 பேர் காயம்

லாரிகள் இடையே சிக்கிய கார்: ஆசிரியை பலி; 4 பேர் காயம்

லாரிகள் இடையே சிக்கிய கார்: ஆசிரியை பலி; 4 பேர் காயம்


ADDED : ஏப் 15, 2025 07:07 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 07:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கயம்; காங்கயம் அருகே லாரிகளுக்கு இடையில் கார் சிக்கி, ஆசிரியை பரிதாபமாக இறந்தார்; நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

கோவை, மயிலம்பட்டி, தனம் நகரை சேர்ந்தவர் தியாகராஜன், 65; இவரது மனைவி மரகதம், 57, மகன் நவீன்குமார், 35, மருமகள் அனிதா, 31, பேரன் சுதன், 3 ஆகியோருடன், தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று மதியம் திருப்பூர் மாவட்டம், காங்கயம், காடையூர் அருகேயுள்ள கோவிலுக்கு சாமி கும்பிட காரில் புறப்பட்டார். நவீன்குமார் காரை ஓட்டினார்.

கோவை - கரூர் ரோட்டில் காங்கயம் அருகே காடையூரில், ரோட்டோரம் நின்ற லாரி மீது கார் லேசாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், பின்னால் வந்த மற்றொரு லாரி மீது மோதி, மீண்டும் இன்னொரு லாரி மீது மோதியது. லாரிகளுக்கு இடையில் கார் சிக்கியது. காயமடைந்த, ஐந்து பேரையும் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மரகதம் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. மற்ற 4 பேரும், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

இறந்த மரகதம், தனியார் பள்ளி ஆசிரியை; நவீன்குமார், சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.






      Dinamalar
      Follow us