sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கல்வி அலுவலரை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

/

கல்வி அலுவலரை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கல்வி அலுவலரை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கல்வி அலுவலரை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 20, 2024 10:18 PM

Google News

ADDED : செப் 20, 2024 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார் : வட்டார கல்வி அலுவலரை கண்டித்து, துவக்க பள்ளி ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பிள்ளையப்பம்பாளையம் நடுநிலைப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வரும் பாலகிருஷ்ணன் என்பவருக்கு, இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து அன்னுார் வட்டார கல்வி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், நேற்று மாலை வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டணியின் வட்டாரத் தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார்.

வட்டார செயலாளர் கலைச்செல்வி பேசுகையில், பலமுறை வட்டார கல்வி அலுவலகத்தில் தெரிவித்தும், சம்பளம் வழங்கப்படவில்லை. சக ஆசிரியரின் வாழ்வாதாரக் கோரிக்கைக்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது, என்றார்.

கூட்டணியின் மாவட்ட செயலாளர் வீராசாமி, வட்டார பொருளாளர் ரவி, உள்பட 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.






      Dinamalar
      Follow us