ADDED : ஏப் 08, 2026 07:17 PM

அ நிறம் | அளவு
கோவை: பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில் 'டெக் டே' விழா கோலாகலமாக நடந்தது. கல்லுாரி முதல்வர் பிரகாசன் விழாவிற்குத் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெங்களூரு, இஸ்ரோ லேபரட்டரி பார் எலக்ட்ரோ ஆப்டிக்ஸ் சிஸ்டம்சின் இயக்குநர் ஸ்ரீராம், இஸ்ரோவில் உள்ள வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
பாடத்திட்டம், வழிகாட்டுதல், மற்றும் கல்வித் தலைமையில் சிறந்து விளங்கிய பேராசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. கல்வி, விளையாட்டு, கலை, தலைமைத்துவத்தில் சிறந்த மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
கல்லுாரியின் உயரிய விருதான 'கூரத்தாழ்வார் விருது', இறுதியாண்டு பி.இ., மின்துறை மற்றும் மின்னணு பொறியியல் மாணவர் மேகலனுக்கு வழங்கப்பட்டது.
