/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நோட்டீஸ் அடிக்க சொன்னது யாரு தேர்தல் அதிகாரியிடம் விவரம் கூறு
/
நோட்டீஸ் அடிக்க சொன்னது யாரு தேர்தல் அதிகாரியிடம் விவரம் கூறு
நோட்டீஸ் அடிக்க சொன்னது யாரு தேர்தல் அதிகாரியிடம் விவரம் கூறு
நோட்டீஸ் அடிக்க சொன்னது யாரு தேர்தல் அதிகாரியிடம் விவரம் கூறு
ADDED : மார் 17, 2026 09:31 PM
கோவை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், அச்சகங்களில் ஆர்டர் கொடுப்பவர்களின் முழு விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
அச்சகங்களில் தேர்தல் தொடர்பான நோட்டீஸ்கள், போஸ்டர்கள், மற்றும் பிளக்ஸ் பேனர்கள் அச்சிடும் போது, ஆர்டர் கொடுத்தவரின் பெயர், முகவரி, மற்றும் அச்சகத்தின் பெயர், எண்ணிக்கை ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் பொருளையும் அச்சிடுவதற்கு முன், ஆர்டர் கொடுப்பவரிடம் உறுதிமொழி கடிதம் எழுதி வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அச்சிடப்பட்ட போஸ்டர் அல்லது நோட்டீஸில், அச்சிட்ட அச்சகத்தின் பெயர் மற்றும் அச்சிட்ட எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும்.
அச்சிட்ட பொருட்களின் நகல்களை உடனடியாக அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரி அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
வெறுப்பு பிரசாரம் மேற்கொள்ளாமல் இருக்கவும், அது பரவாமல் தடுக்கவும் தேர்தல் கமிஷன் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக, மாவட்ட மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூறியுள்ளனர்.

