/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இதய செயல்பாட்டை அறிய கே.எம்.சி.எச்.ல் பரிசோதனை
/
இதய செயல்பாட்டை அறிய கே.எம்.சி.எச்.ல் பரிசோதனை
ADDED : ஆக 25, 2025 10:02 PM
கோ வை - அவிநாசி ரோட்டில் அமைந்துள்ளது, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை. இங்கு இதயம் தொடர்பான சிறப்பு பரிசோதனை முகாம், ஆக., 4ல் துவங்கியது; வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.
கே.எம்.சி.எச்., நிர்வாகத்தினர் கூறியதாவது:
ரத்த அழுத்தம், சர்க்கரை, ரத்தத்தில் கொழுப்பு, உடல் பருமன், புகை பிடித்தல், உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால், இதயத்தில் பாதிப்பு, ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்புக்கு வழிவகுக்கிறது.
40 வயதுக்கு மேல் மாரடைப்பு வருவது பொதுவாக உள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவு, கொழுப்பு, உப்பு, ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி., டி.எம்.டி., அல்லது எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் வாயிலாக இதயத்தின் பாதிப்புகளை கண்டறிந்து, உரிய சிகிச்சை பெறலாம்.
அடைப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய, ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அடைப்பு இருந்தால், ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சை வாயிலாக, அடைப்புகள் நீக்கப்படுகின்றன.
கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், சிறப்பு இருதய பரிசோதனை முகாம் ஆக.,4ம் தேதி முதல் நடந்து வருகிறது. வரும் 30ம் தேதி வரை தினமும் காலை, 7:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கும் இம்முகாமில், அடிப்படை பரிசோதனைகளான சர்க்கரை பாதிப்பு, கொழுப்பு சத்தின் அளவு, கிரியேட்டினின், ஈ.சி.ஜி., எக்கோ அல்லது டி.எம்.டி., மற்றும் மருத்துவர் ஆலோசனை பெறலாம்.
இப்பரிசோதனைகளுக்கு கட்டணமாக ரூ.1,750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முகாமில் மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளுக்கு, கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, 74188 87411 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.