நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;குறிச்சி, சுந்தராபுரம், பசும்பொன் காவடிக்குழு சார்பில், 10ம் ஆண்டு தைப்பூசத் திருவிழா நடந்தது.
ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், வேல் மற்றும் காவடிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து, விழாவில் கலந்துகொண்ட நுாற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் கலந்துகொண்ட, ஸ்ரீ அய்யனார் ஆதினம் குருமகா சந்நிதானம் தவத்திரு ஹரிஹர ஸ்ரீ ஸ்ரீனிவாச சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார்.