sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாணவர்கள் பாதை மாறாமல் பாதுகாப்பதே அரசின் நோக்கம்! கோவை கலெக்டர் உறுதி

/

மாணவர்கள் பாதை மாறாமல் பாதுகாப்பதே அரசின் நோக்கம்! கோவை கலெக்டர் உறுதி

மாணவர்கள் பாதை மாறாமல் பாதுகாப்பதே அரசின் நோக்கம்! கோவை கலெக்டர் உறுதி

மாணவர்கள் பாதை மாறாமல் பாதுகாப்பதே அரசின் நோக்கம்! கோவை கலெக்டர் உறுதி


ADDED : பிப் 04, 2024 02:16 AM

Google News

ADDED : பிப் 04, 2024 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;''போதை பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன,'' என, கோவை கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கான மாநாடு நேற்று நடந்தது. அதில், பங்கேற்ற கோவை கலெக்டர் கிராந்திகுமார், நிருபர்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில், போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. புகையிலை பொருட்கள் மற்றும் போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த அரசுத்துறைகள் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

விற்பனை செய்யும் கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. அதிகளவு அபராதம் விதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி அருகே உள்ள பெட்டிக்கடைகளில் போதை மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கண்காணித்து தகவல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பள்ளிகளிலும் குழு அமைத்து, போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடம் விளக்கப்படுகிறது. பள்ளி மேலாண்மை குழுவினரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். அனைவரும் இணைந்து செயல்பட்டால் போதை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தலாம்.

மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் பாதுகாப்பதை அரசின் நோக்கமாகும். இதற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு, கலெக்டர் கூறினார்.






      Dinamalar
      Follow us