/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆட்டோ ஷோ கண்காட்சி இன்று நிறைவு பெறுகிறது
/
ஆட்டோ ஷோ கண்காட்சி இன்று நிறைவு பெறுகிறது
ADDED : அக் 07, 2024 12:53 AM
கோவை : கோவை மோட்டார் பார்ட்ஸ் டீலர்ஸ் சங்கம் சார்பாக, கொடிசியாவில் வாகனங்கள் சார்ந்த, 'ஆட்டோ ஷோ' கண்காட்சி நடக்கிறது. சங்க தலைவர் ஆறுமுகம் மற்றும் கோவை ஆட்டோஷோ கண்காட்சி தலைவர் சிவகுமார் தலைமை வகித்தனர்.
கடந்த 5ம் தேதி துவங்கிய இக்கண்காட்சியில், அனைத்து இரண்டு சக்கர வாகனங்கள், கார்கள், கனரக வாகனங்கள் தொடர்பான அனைத்தும், ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில், அசோக் லேலண்ட், பென்ஸ், பிரிக்கால், வால்வோ, ஸ்கோடா, ஹூண்டாய், எம்.ஜி.மோட்டர்ஸ், டாடா, மகேந்திரா உள்ளிட்ட பல நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள், மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள், இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உயர்தர பேட்டரி மற்றும் ஆயில் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இறுதிநாளான இன்று மாலை, 6:00 மணி வரை பார்வையாளர்கள் பங்கேற்கலாம். துவக்கவிழா நிகழ்வில், ஏ.வி.நிறுவனங்களின் தலைவர் வரதராஜன், பிரிக்கால் நிறுவனர் மோகன், இந்திய வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ராஜேஷ்லுண்ட் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

