/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலம் பணி பாதியிலேயே நிற்கிறது; மீண்டும் துவங்க வலியுறுத்தல்
/
பாலம் பணி பாதியிலேயே நிற்கிறது; மீண்டும் துவங்க வலியுறுத்தல்
பாலம் பணி பாதியிலேயே நிற்கிறது; மீண்டும் துவங்க வலியுறுத்தல்
பாலம் பணி பாதியிலேயே நிற்கிறது; மீண்டும் துவங்க வலியுறுத்தல்
ADDED : அக் 18, 2024 10:24 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, வடுகபாளையம் பிரிவில், சுரங்க நடை பாதை பாலம் அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், புதர் மண்டி காணப்படுகிறது.
பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், போக்குவரத்து வசதிக்காக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், வடுகபாளையம் பகுதி மக்கள் பொள்ளாச்சி வந்து செல்லும் வகையில், பாலக்காடு ரோட்டில் நடைபாதை பாலம் அமைக்க ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை வாயிலாக கடந்தாண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது பொதுமக்கள், அரசியல் கட்சியினர், 'சுரங்கவழி நடைபாதையாக அமைக்காமல், வாகனங்கள் சென்று வர ஏதுவாக அமைக்க வேண்டும். வடுகபாளையம் ரயில் கேட் மூடப்பட்டால், வடுகபாளையம் உள்ளிட்ட சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்கள், சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.
எனவே, அங்கு இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு சுரங்க பாதை அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும்,' என வலியுறுத்தினர். எனினும், சுரங்க நடைபாதை பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன.இந்நிலையில், இப்பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால், அவ்விடம் புதர் மண்டி காணப்படுகிறது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'சுரங்க நடைபாதை பாலம் கட்டும் பணிகள் முழு அளவில் மேற்கொள்ளாமல் பாதியிலேயே நிற்கிறது. முழுமை பெறாத இடம் முழுவதும் புதர்கள் மண்டி விஷ பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. பாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கி சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இப் பணிகள் முடிவதற்கு முன்பே, வடுகபாளையம் ரயில்வே கேட்டை ரயில்வே நிர்வாகம் மூடியது. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே மீண்டும் திறக்கப்பட்டது.
ஆனால், சுரங்க நடைபாதை பாலம் அல்லது வாகனங்கள் சென்று வரும் வகையில் பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.