sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் வரும் 8ல் குண்டம் இறங்குதல்

/

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் வரும் 8ல் குண்டம் இறங்குதல்

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் வரும் 8ல் குண்டம் இறங்குதல்

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் வரும் 8ல் குண்டம் இறங்குதல்


ADDED : ஏப் 03, 2025 11:48 PM

Google News

ADDED : ஏப் 03, 2025 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; பண்ணாரி மாரியம்மன் கோவிலில் வரும் 8ம் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியை அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு நடைபெறும் குண்டம் திருவிழாவுக்கு, அன்னூர் வட்டாரத்திலிருந்து, பாதயாத்திரையாக பலர் செல்வது வழக்கம். கோவிலில் திருவிழா நாட்களில், அன்னூர் பகுதி சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இக்கோவில் குண்டம் திருவிழா கடந்த வாரம் துவங்கியது. 31ம் தேதி வரை மாலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. கடந்த 1ம் தேதி கம்பம் நடப்பட்டது. அதன் பிறகு தினமும் கம்பம் சுற்றி ஆடும் வைபவம் நடந்து வருகிறது.

வரும் 7ம் தேதி, இரவு குண்டம் தயார் செய்தலும், 8ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் குண்டம் இறங்குதலும் நடைபெறுகிறது. வரும் 9ம் தேதி புஷ்ப ரதத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. 10ம் தேதி மஞ்சள் நீராட்டும், 11ம் தேதி தங்க ரதத்தில் உலாவும், 12ம் தேதி பவுர்ணமி திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. வரும் 14ம் தேதி மறு பூஜை நடைபெறுகிறது.

விழாவில் பங்கேற்று அம்மன் அருள் பெற விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us