sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வணிக வளர்ச்சியில் முதல் பரிசுகோவை தபால் கோட்டம் அபாரம்

/

வணிக வளர்ச்சியில் முதல் பரிசுகோவை தபால் கோட்டம் அபாரம்

வணிக வளர்ச்சியில் முதல் பரிசுகோவை தபால் கோட்டம் அபாரம்

வணிக வளர்ச்சியில் முதல் பரிசுகோவை தபால் கோட்டம் அபாரம்


ADDED : நவ 09, 2024 11:33 PM

Google News

ADDED : நவ 09, 2024 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தபால் துறையில், மேற்கு மண்டல அளவில் நடந்த விருது வழங்கும் விழாவில், கோவை கோட்டம், வணிக வளர்ச்சியில் முதல் பரிசு பெற்றது.

தபால் துறையில் சேமிப்பு கணக்குகள், ஆயுள் காப்பீடு, வணிக வளர்ச்சி மற்றும் பிற அஞ்சலக சேவைகள் தொடர்பாக, 2023-24ம் ஆண்டுக்கான, மேற்கு மண்டல அளவிலான விருது வழங்கும் விழா, கோவை வேளாண் பல்கலையில் நடந்தது.

இதில், கோவை கோட்டம், வணிக வளர்ச்சியில் முதல் பரிசு, அதிகளவில் மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு துவங்கியதற்காக முதல் பரிசு, பொன்மகன் சேமிப்பு கணக்கு துவங்கியதில் இரண்டாம் பரிசு, 100 சதவீத மின்னணு தபால் பெட்டி பயன்பாட்டை செயல்படுத்தியதற்கான சிறப்பு பரிசு பெற்றது.

கோவை வடக்கு உபகோட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு துவங்கியதில் முதலிடம், மாதாந்திர வருமான சேமிப்பு திட்டத்தில் இரண்டாம் இடம், பொன்மகன் சேமிப்பு கணக்கு திட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றது.

கோவை மத்திய உபகோட்டம், அதிக தொடர் வைப்பு கணக்கு துவங்கியதற்காக, மண்டல அளவில் மூன்றாம் இடம் பிடித்தது.

இதே கோட்டத்தை சேர்ந்த லோகநாயகி, அதிகளவில் விரைவு தபால் பதிவு செய்ததற்காகவும், நரசீபுரம் கிளை அஞ்சலகத்தை சேர்ந்த மவுனிகா, அதிகளவில் பி.எல்.ஐ., பிரீமியம் பிடித்தம் செய்ததற்காகவும் மண்டல அளவில் முதலிடமும் பெற்றனர்.

கோவை தெற்கு உபகோட்டம், அதிக தொடர் வைப்பு கணக்கு துவங்கியதற்காக முதலிடம், மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு தொடங்கியதில் இரண்டாம் இடம் பெற்றது.

சேமிப்பு அதிகரிப்பு

மக்களிடம் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அஞ்சல் துறை மீது வைத்துள்ள நம்பிக்கையே இதற்கு காரணம். அஞ்சல் சேமிப்பு குறித்து மேலும் தகவல்களுக்கு, அருகிலுள்ள தபால் நிலையங்களை அணுகலாம்.

- சிவசங்கர், கண்காணிப்பாளர்,

கோவை அஞ்சல் கோட்டம்.






      Dinamalar
      Follow us