sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆஞ்சநேயர் கோவிலில் ராஜகோபுரம் கட்ட அடிக்கல்

/

ஆஞ்சநேயர் கோவிலில் ராஜகோபுரம் கட்ட அடிக்கல்

ஆஞ்சநேயர் கோவிலில் ராஜகோபுரம் கட்ட அடிக்கல்

ஆஞ்சநேயர் கோவிலில் ராஜகோபுரம் கட்ட அடிக்கல்


ADDED : பிப் 17, 2025 10:45 PM

Google News

ADDED : பிப் 17, 2025 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் கோவிலில், 2.28 கோடி ரூபாய் செலவில், ஐந்து நிலை ராஜகோபுரம் கட்ட, காணொளி காட்சி வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

சிறுமுகை அடுத்த இடுகம்பாளையத்தில், அனுமந்தராய ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் கட்ட, ஹிந்து சமய அறநிலையத்துறை, 2.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதை அடுத்து ராஜகோபுரம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

அப்போது, ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில், ராஜகோபுரம் கட்டும் இடத்தில், கோவில் அர்ச்சகர் சிறப்பு பூஜை செய்தார். இதில் ஹிந்து சமய அறநிலைத்துறை, கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாணசுந்தரம், கோவில் செயல் அலுவலர் வெண்ணிலா, அறங்காவலர் குழு தலைவர் சண்முகம், உறுப்பினர்கள் முத்துசாமி, மயில்சாமி, பழனிசாமி, தமிழ் மாத முதல் சனிக்கிழமை விழா குழு தலைவர் ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us