sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நீதிமன்றம் உத்தரவிட்டும் கருணை காட்டாத தமிழக அரசு

/

நீதிமன்றம் உத்தரவிட்டும் கருணை காட்டாத தமிழக அரசு

நீதிமன்றம் உத்தரவிட்டும் கருணை காட்டாத தமிழக அரசு

நீதிமன்றம் உத்தரவிட்டும் கருணை காட்டாத தமிழக அரசு


ADDED : மார் 05, 2024 07:38 AM

Google News

ADDED : மார் 05, 2024 07:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''தி.மு.க., ஆட்சி அமைத்ததும், அரசு டாக்டர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என, முதல்வர் உறுதியளித்திருந்தார். ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகியும் கோரிக்கைகளை நிறைவேறவில்லை. அரசு டாக்டர்களை வேதனைப்பட வைக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான்.

கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை தர வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அரசு கருணை காட்டவில்லை. அரசு டாக்டர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்றுவது குறித்து, ஆறு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, நீதிமன்ற உத்தரவுப்படியும், முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354யின்படியும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தன் தந்தையின் அரசாணையை முதல்வர் நிறைவேற்றாவிட்டால், அவற்றை வேறு யார் நிறைவேற்றுவர்?

கருணாநிதி நுாற்றாண்டு விழாவில், பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவது போல், டாக்டர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.

- எஸ்.பெருமாள்பிள்ளை, தலைவர், அரசு டாக்டர்களுக்கான போராட்டக்குழு.






      Dinamalar
      Follow us