sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 டிட்வா புயல் எதிரொலி குறைந்தது மீன் வரத்து

/

 டிட்வா புயல் எதிரொலி குறைந்தது மீன் வரத்து

 டிட்வா புயல் எதிரொலி குறைந்தது மீன் வரத்து

 டிட்வா புயல் எதிரொலி குறைந்தது மீன் வரத்து


ADDED : டிச 03, 2025 06:40 AM

Google News

ADDED : டிச 03, 2025 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தமிழகத்தில் டிட்வா புயல் தாக்கம் காரணமாக, மீன் வரத்து குறைந்துள்ளது. அதே சமயம், கார்த்திகை காரணமாக மீன் நுகர்வும் குறைந்துள்ளதால், வியாபாரிகளுக்கு இதன் பாதிப்பு பெரியளவில் தெரியவில்லை.

கோவை மீன் மார்க்கெட்டுக்கு ராமேஸ்வரம், நாகப்பட்டினம், துாத்துக்குடி, கன்னியாகுமரி, கேரளாஆகிய பகுதிகளில்இருந்து மீன் வரத்து இருக்கும். வார நாட்களில், 20 முதல் 30 டன் வரத்தும், வார இறுதியில் 40 டன் வரத்தும் இருக்கும்.

மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் வஞ்சிரம் மீன் வழக்கமாக, 800 முதல் 900 ரூபாய் வரை விற்பனையாகும். சில நேரங்களில், 1500 ரூபாய் வரை கூட விற்பனை செய்யப்படும். இரு நாட்களுக்கு முன், 650 முதல் 700 ரூபாய்க்கு விற்பனையானது. தவிர, பிற மீன்கள் அனைத்தும், சற்று விலை குறைந்து விற்பனையானது.

கோவை மீன் மார்க்கெட் வியாபாரி சல்பிக் ரஹ்மான் கூறுகையில், ''கார்த்திகை மாதம் என்பதால், மீன் நுகர்வு வழக்கத்தை காட்டிலும் குறைவது இயல்பு. புயல், மழை காரணமாககோவை சந்தைக்கு வரத்து வழக்கத்தை காட்டிலும், 40-50 சதவீதம் குறைவாகவே உள்ளது. கேரளாவிலிருந்து வரத்து இருந்ததாலும், மீன் நுகர்வு குறைவு என்பதாலும், விலை சற்று குறைந்தே விற்பனையாகிறது,'' என்றார்.






      Dinamalar
      Follow us