/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
/
போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : செப் 30, 2024 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர் : கோவை, கரும்புக்கடை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., முருகன். புட்டு விக்கி சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அவ்வழியே ஸ்கூட்டரில் வந்தவரிடம் விசாரித்தார். அவர் தெற்கு உக்கடம், ஜி.எம்.நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜமிஷா, 29 என்பதும், 150 கிலோ ரேஷன் அரிசி வைத்திருப்பதும் தெரிந்தது.
அரிசி, வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்றபோது, தான் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை காண்பித்து, எஸ்.ஐ.,க்கு ஜமிஷா, கொலை மிரட்டல் விடுத்து, தப்பிக்க முயன்றார். உடனிருந்த போலீசார் அவரை பிடித்து, கைது செய்தனர்.