/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேலாளரின் ரூ.5.50 லட்சம் 'லிங்க்' தொட்டதும் போச்சு!
/
மேலாளரின் ரூ.5.50 லட்சம் 'லிங்க்' தொட்டதும் போச்சு!
மேலாளரின் ரூ.5.50 லட்சம் 'லிங்க்' தொட்டதும் போச்சு!
மேலாளரின் ரூ.5.50 லட்சம் 'லிங்க்' தொட்டதும் போச்சு!
ADDED : பிப் 04, 2024 02:45 AM
கோவை,: கோவை, ஈச்சனாரியை சேர்ந்தவர் அறிவழகன், 37; தனியார் நிறுவன மேலாளர். சில நாட்களுக்கு முன், அவரது மொபைல்போன் எண்ணுக்கு மெசேஜ் ஒன்று வந்தது.
அதில், அவரது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கிற்கு வெகுமதி பணம் கிடைத்துள்ளதாகவும், அதை உடனடியாக பெற ஒரு லிங்க் அனுப்பியுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
உடனே அவர், அந்த லிங்க்கில் நுழைந்து, தன் வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்தார். சிறிது நேரத்தில் அவரது கணக்கில் இருந்த, 5.50 லட்சம் ரூபாய் மாயமானது. அறிவழகன் வங்கியில் விசாரித்தார். வங்கியில் இருந்து அவ்வாறு யாரும் தகவல் அனுப்பவில்லை என்றனர்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.