sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வரும், 11ல் துவக்கம்

/

மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வரும், 11ல் துவக்கம்

மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வரும், 11ல் துவக்கம்

மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வரும், 11ல் துவக்கம்


ADDED : பிப் 03, 2025 11:56 PM

Google News

ADDED : பிப் 03, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வரும், 11ம் தேதி துவங்கி, மார்ச் 5ம் தேதி தேரோட்டம் துவங்குகிறது.

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு திருவிழா, வரும், 11ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது.

வரும், 17ம் தேதி இரவு, அணி எடுப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 18ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கரியகாளியம்மன் அபிேஷகம், இரவு, 11:00 மணிக்கு கம்பம் நடுதல், 19ம் தேதி காலை, 6:00 மணிக்கு கரியகாளியம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், 21ம் தேதி இரவு, கரியகாளியம்மன் கடைசிநாள் அபிேஷகம் நடக்கிறது.

வரும், 25ம் தேதி இரவு, 9:00 மணிக்கு பூவோடு வைத்தல், 28ம் தேதி, வெளிப்பூவோடு துவக்கம், இரவு, 11:00 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது.

மார்ச்., 1ம் தேதி காலை, 10:30 மணிக்கு கொடி கட்டுதல், 2ம் தேதி மாலை, 6:00 மணிக்கு ஏ.பி.டி., ரோடு பூவோடு எடுக்கப்படுகிறது.

அதன்பின், தினமும் இரவு பொதுமக்கள் பூவோடு வழிபாடு நடக்கிறது. 3ம் தேதி காலை, 9:00 மணிக்கு ஆயக்கால் போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

மார்ச் 4ம் தேதி காலை, 9:00 மணிக்கு மகுடம் வைத்தல் பூஜை, 5ம் தேதி காலை, மாவிளக்கு, மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

அன்று, இரவு, 7:00 மணிக்கு முதல் நாள் தேரோட்டமும், மார்ச் 6ம் தேதி இரவு இரண்டாம் நாள் தேரோட்டம் நடக்கிறது. 7ம் தேதி இரவு, மூன்றாம் நாள் தேரோட்டமும், தேர்நிலைக்கு வருதல், தெப்பத்தேர் வைபவம் நடக்கிறது.

மார்ச் 8ம் தேதி காலை, மஞ்சள் நீராடுதல், இரவு கம்பம் எடுத்தல்; 10ம் தேதி இரவு மஹா அபிேஷக வழிபாடு நடக்கிறது.






      Dinamalar
      Follow us