/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொண்டிபாளையம் பெருமாள் கோவில் தேர்த்திருவிழா வரும் 3ம் தேதி துவக்கம்
/
மொண்டிபாளையம் பெருமாள் கோவில் தேர்த்திருவிழா வரும் 3ம் தேதி துவக்கம்
மொண்டிபாளையம் பெருமாள் கோவில் தேர்த்திருவிழா வரும் 3ம் தேதி துவக்கம்
மொண்டிபாளையம் பெருமாள் கோவில் தேர்த்திருவிழா வரும் 3ம் தேதி துவக்கம்
ADDED : ஜன 20, 2025 11:16 PM
அன்னுார்; மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில் தேர்த்திருவிழா வரும் 3ம் தேதி துவங்குகிறது.
மேலத்திருப்பதி என்று அழைக்கப்படும், 400 ஆண்டு பழமையான மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில், 58ம் ஆண்டு தேர்த் திருவிழா வரும் 3ம் தேதி துவங்குகிறது.
வரும் 3ம் தேதி இரவு நகர சோதனை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பனம் நடக்கிறது. வரும் 4ம் தேதி காலை 6:00 மணிக்கு பெருமாளுக்கு திருகாப்பு கட்டுதலும், காலை 8:00 மணிக்கு கொடியேற்றமும் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு பெருமாள் அன்ன வாகனத்தில் திருவீதியுலா வந்து அருள் பாலிக்கிறார்.
வருகிற பிப். 7ம் தேதி வரை, தினமும் காலை 7:00 மணிக்கும், இரவு 8:00 மணிக்கும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து அருள் பாலிக்கிறார்.
8ம் தேதி காலை 10:00 மணிக்கு அம்மன் அழைத்தலும், இதையடுத்து, சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. வரும் 9ம் தேதி இரவு யானை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா நடக்கிறது.
10ம் தேதி காலை 8:00 மணிக்கு பெருமாள் தேருக்கு எழுந்தருளு கிறார். காலை 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்கின்றனர்.
11ம் தேதி இரவு பரிவேட்டையும், 12ம் தேதி இரவு தெப்ப தேரோட்டமும் நடைபெறுகிறது. 13ம் தேதி மஞ்சள் நீராடுதலுடன், கொடி இறக்கப்பட்டு, தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.