/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடர்கதையாகும் போக்குவரத்து விதிமீறல்' போலீசாரின் 'கடிவாளம்' அவசியம்
/
தொடர்கதையாகும் போக்குவரத்து விதிமீறல்' போலீசாரின் 'கடிவாளம்' அவசியம்
தொடர்கதையாகும் போக்குவரத்து விதிமீறல்' போலீசாரின் 'கடிவாளம்' அவசியம்
தொடர்கதையாகும் போக்குவரத்து விதிமீறல்' போலீசாரின் 'கடிவாளம்' அவசியம்
ADDED : அக் 17, 2024 10:24 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகர எல்லைக்குள் போக்குவரத்து விதிமீறும் வாகனங்களால், நெரிசல் நிரந்தரமாகி விட்டது. போலீசார் உரிய கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பொள்ளாச்சியில் குடியிருப்புகள், வணிகக் கடைகளும் நாளுக்குள் நாள் பெருகி வருகிறது. இதனால், முக்கிய சாலைகளில் எந்த நேரமும் வாகன நெரிசல் தவிர்க்க முடியாததாக உள்ளது. சில சந்திப்புகளில், ரவுண்டானா அமைத்தும் முறையாக இயக்காத வாகனங்களால், விபத்து ஏற்படுகிறது.
வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், 'நோ பார்க்கிங்', 'ஒன்வே' போன்ற விதிமுறைகளை போலீசார் நடைமுறைப்படுத்தினாலும், வாகன ஓட்டுநர்கள் கண்டுகொள்வதும் கிடையாது.
தீயணைப்பு நிலையம், வெங்கட்ரமண வீதி, நியூ ஸ்கீம் ரோடு, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் ஒட்டிய சாலைகளில், பெரும்பாலான வாகன ஓட்டுநர்கள், விதிகளைப் பொருட்படுத்தாமல் இஷ்டம் போல் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர்.
குறிப்பாக, 'நோ- பார்க்கிங்' பகுதியில் வாகனங்களை நிறுத்துவதும், 'நோ- என்ட்ரி' பகுதியில் சென்றும் விதிகளை மீறுகின்றனர்.
தேர்முட்டியில் ரவுண்டானா ஒட்டிய மார்க்கெட் பகுதியில் இருந்து வெளியேறும் பெரும்பாலான வாகனங்கள், அரசு மருத்துவமனை எதிரே சென்று திருப்பப்படுவது கிடையாது. மாறாக, அவ்வழித்தடத்தில் எதிர்திசையில் இயக்கப்படுவதால், போக்குவரத்து நெரிசலுடன் விபத்தும் அதிகரிக்கிறது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
அத்தியாவசிய தேவைக்கு, தனியார் நிறுவனங்களுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் வரும் மக்களுக்கு, வாகனங்களை நிறுத்த இடவசதி ஏற்படுத்த வேண்டும். அதேநேரம், சாலை விதிகளை முறையாக வாகன ஓட்டுநர்கள் பின்பற்றுகின்றனரா என போலீசார் முறையாக கண்காணிக்க வேண்டும்.
விதிமீறுவோர் மீது நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே, வாகன போக்குவரத்து சீராக இருக்கும். அதேபோல, அபராதத் தொகை வசூலிக்க முற்பட்டாலும், போக்குவரத்து விதிமீறலை தொடராமல் இருக்க, அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.