/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பங்குனி உத்திர திருவிழா வரும், 6ல் நடக்கிறது
/
பங்குனி உத்திர திருவிழா வரும், 6ல் நடக்கிறது
ADDED : ஏப் 01, 2025 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி பழநி ஆண்டவர் தீர்த்தக்காவடியின், 75வது ஆண்டு பவளவிழா மற்றும் பங்குனி உத்திர திருவிழா வரும்,6ம் தேதி நடக்கிறது. பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவிலில், அன்று, காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், காலை, 7:00 மணிக்கு ஆறுமுக காவடிக்கும், வேலுக்கும், 18 வகையான அபிேஷகங்கள், ஆராதனை, காவடி முத்தரித்தல் பூஜை நடக்கிறது.
அதன், காலை, 9:30 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சிகளும், காலை, 11:00 மணிக்கு இன்னிசை கச்சேரி, மதியம், 1:00 மணிக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பழநி ஆண்டவர் தீர்த்தக்காவடி குழுவினர் செய்து வருகின்றனர்.

