/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் வீரர், வீராங்கனைகள் அபாரம்
/
ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் வீரர், வீராங்கனைகள் அபாரம்
ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் வீரர், வீராங்கனைகள் அபாரம்
ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் வீரர், வீராங்கனைகள் அபாரம்
ADDED : ஜூலை 14, 2025 11:31 PM
கோவை; கோவை மாவட்ட ஒற்றையர் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி, சரவணம்பட்டியில் நடந்தது. இதில், குழந்தைகள், பெரியவர்கள் உட்பட, 40க்கும் மேற்பட்ட மாவட்ட மற்றும் மாநில வீரர்கள் பங்கேற்றனர்.
லீக் சுற்றுகள் மற்றும் 'நாக் அவுட்' சுற்றுகளுக்குப் பிறகு, வீரர் ரியான்ஸ் முதல் அரையிறுதியில் வீரர் நித்தின் கண்ணாவை, 11-9, 11-4, 4-11, 11-4 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தார்.
இரண்டாவது அரையிறுதியில் வீராங்கனை யோகிதா, வீரர் சங்கரை, 11-8, 9-11, 11-9, 11-9, 8-1 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
பரபரப்பான இறுதிப் போட்டியில் வீரர் ரியான்ஸ், 11-7, 10-12, 11-8, 11-9 என்ற புள்ளி கணக்கில் யோகிதாவை வீழ்த்தி, முதல் பரிசை வென்றார். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.