sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பூக்கள் விலை உயர்வு மல்லி கிலோ ரூ.2 ஆயிரம்

/

பூக்கள் விலை உயர்வு மல்லி கிலோ ரூ.2 ஆயிரம்

பூக்கள் விலை உயர்வு மல்லி கிலோ ரூ.2 ஆயிரம்

பூக்கள் விலை உயர்வு மல்லி கிலோ ரூ.2 ஆயிரம்


ADDED : அக் 30, 2024 08:47 PM

Google News

ADDED : அக் 30, 2024 08:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உடுமலை சந்தைக்கு பூக்கள் வரத்து அதிகரித்த நிலையில், விலையும் பல மடங்கு அதிகரித்தது.

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், உடுமலை பூ மொத்த விற்பனை மார்க்கெட்டிற்கு, பூக்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. விற்பனையும் உயர்ந்த நிலையில், விலையும் உயர்ந்து காணப்பட்டது.

உடுமலையிலுள்ள மொத்த விற்பனை பூ சந்தை கடைகளுக்கு, திண்டுக்கல் நிலக்கோட்டை, சேலம் பகுதிகளிலிருந்து, மல்லி, செவ்வந்தி, செண்டுமல்லி என பல வகை பூக்கள், இரண்டு டன்னுக்கு மேல் வந்தது.

கடந்த சில நாட்களாக, விலை குறைந்து காணப்பட்ட பூக்கள் விலை, நேற்று அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ மல்லி, 2 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையானது.

அதே போல் மற்ற பூக்களின் விலையும் பல மடங்கு அதிகரித்தது. ஜாதிமல்லி மற்றும் முல்லை பூக்கள் கிலோ, ரூ. ஆயிரம் ரூபாய்க்கும்,பட்டு ரோஸ், கிலோ ரூ. 800, சம்மங்கி பூ ரூ.400, செண்டுமல்லி, ரூ.100 மற்றும் அரளி, துளசி, செவ்வரளி பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.






      Dinamalar
      Follow us