sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சரவணம்பட்டி - துடியலுார் சாலை வரை நான்கு வழியாக்கினால் பிரச்னை தீரும்

/

சரவணம்பட்டி - துடியலுார் சாலை வரை நான்கு வழியாக்கினால் பிரச்னை தீரும்

சரவணம்பட்டி - துடியலுார் சாலை வரை நான்கு வழியாக்கினால் பிரச்னை தீரும்

சரவணம்பட்டி - துடியலுார் சாலை வரை நான்கு வழியாக்கினால் பிரச்னை தீரும்


ADDED : ஜன 28, 2025 11:57 PM

Google News

ADDED : ஜன 28, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; சரவணம்பட்டி முதல் துடியலுார் இணைப்பு சாலை வரை, 6 கி.மீ., துாரத்துக்கு, நான்கு வழிச்சாலையாக்க, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் பெரும்பகுதி புறநகரை சேர்ந்தது. நகரம் வளர்ச்சி அடைந்து வருவதால் கம்பெனிகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் பெருகி வருகின்றன.

சரவணம்பட்டியில் இருந்து துடியலுார் இணைப்பு சாலை வரை, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. 'பீக் ஹவர்ஸில்' போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால், சாலையை விஸ்தரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலுவிடம், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் கொடுத்துள்ள மனுவில், 'சரவணம்பட்டி முதல் துடியலுார் இணைப்பு சாலை வரை, போக்குவரத்து அதிகமாக உள்ளது. மூன்று கி.மீ., சுற்றளவில், பன்னாட்டு நிறுவனங்கள், ஆறு பொறியியல் கல்லுாரிகள், ஐந்து பள்ளிகள் செயல்படுகின்றன.

முக்கியமான தொழில்நிறுவனங்கள் அமைந்துள்ளன. அவிநாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோட்டுக்கு இணைப்பு சாலையாகவும் உள்ளது. போக்குவரத்து நெரிசல், விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்க, நான்கு வழிச்சாலையாக்க வேண்டும்' என கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us