sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பலாத்காரம் செய்ய முயன்ற பேராசிரியர் கைது

/

பலாத்காரம் செய்ய முயன்ற பேராசிரியர் கைது

பலாத்காரம் செய்ய முயன்ற பேராசிரியர் கைது

பலாத்காரம் செய்ய முயன்ற பேராசிரியர் கைது

3


ADDED : நவ 14, 2024 07:54 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:54 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது பெண், எம்.எஸ்சி., பட்டதாரி. இவர், கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வேலைக்கு சேரும்போது, பெண்ணின் கல்விச்சான்றிதழை நிறுவனத்தினர் வாங்கி வைத்துக் கொண்டனர். தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த பெண்வேலையை விட்டு நின்றுவிட்டார். பணிபுரிந்தநிறுவனத்தினர், பெண்ணின் கல்விச் சான்றிதழை கொடுக்க மறுத்து விட்டனர்.

இது குறித்து, கல்வீரம்பாளையம், முருகன் நகர் பகுதியில் வசிக்கும் கல்லுாரி பேராசிரியர் சிவபிரகாசம், 45, என்பவரிடம் அந்த பெண்கூறினார். பெண்ணின் சான்றிதழை பெற்றுத் தர உதவுவதாக சிவபிரகாசம் கூறியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சில நாட்களுக்கு முன் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட சிவபிரகாசம், 'சான்றிதழை வாங்கி வைத்துள்ளேன்; வேறு நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறேன்' என கூறி, அந்த பெண்ணைகோவைக்கு அழைத்தார்.

அதை உண்மை என நம்பிய அப்பெண்,நேற்று முன்தினம் சிவபிரகாசம் வீட்டுக்கு சென்றார். வீட்டில் சிவபிரகாசம் மட்டும் இருந்தார். அப்போது, அவர் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். உடனே அந்த பெண் அவரை கீழே தள்ளிவிட்டு, வீட்டின் குளியல் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்; அங்கிருந்தபடியே, தன் தோழியை தொடர்பு கொண்டு நடந்ததை அந்த பெண் தெரிவித்தார்.

மேலும், தான் இருக்கும் இடத்தின், லொக்கேஷனை, 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பினார். இது குறித்து பெண்ணின் தோழி, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். வடவள்ளி போலீசார், அந்த பெண் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.அங்கு சென்று, குளியல் அறையில் இருந்த பெண்ணை மீட்டனர். கல்லுாரி பேராசிரியர் சிவபிரகாசத்தை கைது செய்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார், சிவபிரகாசத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us