/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநீர் கொள்முதல் விலை ரூ.2 குறைந்தது
/
இளநீர் கொள்முதல் விலை ரூ.2 குறைந்தது
ADDED : டிச 09, 2024 10:57 PM
பொள்ளாச்சி; ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை கொள்முதல் விலை கடந்த வார விலையை விட, இரண்டு ரூபாய் குறைந்துள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை விட, இரண்டு குறைக்கப்பட்டு, 24 ரூபாய் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 9,250 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் மிகவும் குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவுவதால், அங்கு இளநீர் தேவை குறைந்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் இளநீர் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே இளநீரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிவப்பு இளநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. நல்ல விலையும் கிடைக்கிறது. குறிப்பாக, சிவப்பு இளநீர், 28 ரூபாய் அளவில் விற்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.