/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே ஸ்டேஷன் மண் பாதையை அடைக்கணும்!
/
ரயில்வே ஸ்டேஷன் மண் பாதையை அடைக்கணும்!
ADDED : ஏப் 23, 2025 10:43 PM
கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணியர் பலர், ரயில்வே நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட தார் ரோட்டை பயன்படுத்துகின்றனர். சிலர் மேடாக இருக்கும் மண் பாதையில் சென்று வருகின்றனர்.
இந்த மண் பாதை கரடு முரடாகவும், அதிகளவு புதர் நிறைந்தும் இருப்பதால் பயணியர் அவதிப்படுகின்றனர். மேலும், சமூகவிரோதிகள் சிலர் ரயில்வேக்கு சொந்தமான இந்த பாதையில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
சில நேரங்களில் போதையில், ரயில்வே ஸ்டேஷனில் ரகளையில் ஈடுபடுகின்றனர். இதனால், பயணியர் அச்சப்படுகின்றனர். எனவே, பயணியர் நலன் கருதி மேடான மண் பாதைக்கு வேலி அமைத்து நிரந்தரமாக மூட வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

