sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சேறும் சகதியுமாக சாலை; கிராம மக்கள் அவதி

/

 சேறும் சகதியுமாக சாலை; கிராம மக்கள் அவதி

 சேறும் சகதியுமாக சாலை; கிராம மக்கள் அவதி

 சேறும் சகதியுமாக சாலை; கிராம மக்கள் அவதி


ADDED : டிச 08, 2025 05:35 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: கெடிமேடு, வேலவன் நகர் இணைப்பு சாலையில், மழை வெள்ளம் தேங்கி, சேறும் சகதியுமாக உள்ளதால், மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே, கோமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டு கெடிமேடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு, வேலவன் நகர் இணைப்பு சாலை அப்பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதி மக்கள் இணைப்பு சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கு, புதிதாக தார் சாலை அமைக்கும் பொருட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர்ந்து பெய்யும் மழையால், சாலை சேறும் சகதியுமாக மாறி உள்ளது.

மேலும், சாலையின் நடுவே தாழ்வான பள்ளம் காணப்படுவதால், வெள்ளம் வழிந்தோடுவதில்லை. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒன்றிய அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து சாலை சீரமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us