/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா முகூர்த்தக்கால் சிறப்பு பூஜையுடன் துவக்கம்
/
சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா முகூர்த்தக்கால் சிறப்பு பூஜையுடன் துவக்கம்
சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா முகூர்த்தக்கால் சிறப்பு பூஜையுடன் துவக்கம்
சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா முகூர்த்தக்கால் சிறப்பு பூஜையுடன் துவக்கம்
ADDED : மே 12, 2025 11:38 PM

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே, சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, முகூர்த்தக்கால் பூஜையுடன் நேற்று துவங்கியது.
பொள்ளாச்சி அருகே உள்ள, சூலக்கல் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற, பழமை வாய்ந்தது. ஆண்டுதோறும் கோவிலில் தேர்த்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 9:30 மணிக்கு சூலக்கல் ஆற்றில் இருந்து மூங்கில் கம்பம், கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. ஆற்றுப்பகுதியில் மூங்கில் மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மலரால் அலங்கரித்த மூங்கிலை, மேள, தாள, இசையுடன் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து, கோவில் வளாகத்தில் மூங்கில், மூன்றாக உடைக்கப்பட்டது. அதன்பின், முகூர்த்த காய் உடைத்து, மூங்கில் நவதானியங்கள் உள்ளிட்டவை கட்டி, அம்மனிடம் வைக்கப்பட்டது.
அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில், புரவிபாளையம் ஜமீன் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பண்ண மன்றாடியார், கோவில் செயல் அலுவலர் கந்தசாமி, பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று, காலை, 9:00 மணிக்கு வேல் புறப்பாடு, இரவு, 9:00 மணிக்கு பூச்சாட்டு விழா நடக்கிறது.19ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கிராமசாந்தி, வாஸ்து சாந்தி பூஜைகளும், 20ம் தேதி இரவு, 7:00 மணிக்கு கம்பம் நாட்டு விழா, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
வரும், 21ம் தேதி காலை, 9:00 மணிக்கு கொடியேற்றம், இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.22ம் தேதி முதல், 27ம் தேதி வரை தினமும் காலை, மற்றும் இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா; இரவு, 9:00 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
வரும், 28ம் தேதி காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, பொங்கல் வைத்தல், இரவு, 7:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, 29ம் தேதி மாலை, 4:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.
வரும், 30ம் தேதி மாலை, 4:30 மணிக்கு இரண்டாம் நாள் தேர் வடம் பிடித்தல், 31ம் தேதி மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் நாள் தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. வரும், ஜூன் 1ம் தேதி மதியம், 12:00 மணிக்கு மஹா அபிேஷகம் நடக்கிறது.
சூலக்கல் சுற்றுப்பகுதியில், எட்டு ஊராட்சிகளில் உள்ள, கிராம மக்களின் காவல் தெய்வமான மாரியம்மன் தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும், கோவிலுக்கு விளைபொருட்களை நேர்த்திக்கடனாக சமர்ப்பிக்க மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.