sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பனி குறையவில்லை; மல்லி விலையும் குறையவில்லை

/

பனி குறையவில்லை; மல்லி விலையும் குறையவில்லை

பனி குறையவில்லை; மல்லி விலையும் குறையவில்லை

பனி குறையவில்லை; மல்லி விலையும் குறையவில்லை


ADDED : பிப் 08, 2024 06:48 AM

Google News

ADDED : பிப் 08, 2024 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : பனிப்பொழிவு குறையாததால், மல்லிகை விலை இன்னும் குறையவில்லை.

கோவை பூமார்க்கெட்டுக்கு, ஊட்டி, கோபி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தினமும் உதிரிப்பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

பனிக்காலத்தில் மல்லி, ஜாதிமல்லி மற்றும் முல்லை பூக்கள் மலர்ச்சி குறைந்து, விலை அதிகரிப்பது வழக்கம். இதனால், கடந்த இரண்டு மாதங்களாக விலை அதிகரித்து, மல்லி கிலோ 2000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

இப்போது பனி குறைந்து, வெயில் அதிகரித்துள்ளது. ஆனாலும், இரவு நேரங்களில் பனிப்பொழிவு குறையவில்லை. அதனால் மல்லிகை உற்பத்தி குறைந்து விலை அதிகரித்துள்ளது.

நேற்று மல்லிகை ஒரு கிலோ 1200 ரூபாய்க்கும், ஜாதிமல்லி, கிலோ 1000 ரூபாய்க்கும், முல்லை கிலோ ரூ.600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து, கோவை மாநகர் மாவட்ட அனைத்து மலர் வியபாரிகள் நலச்சங்க தலைவர் ரவிச்சந்திரன் கூறுகையில், ''மல்லி, ஜாதிமல்லி, முல்லை இந்த மூன்றும் வெயில் காலத்தில்தான் அதிகம் மலர்ச்சி இருக்கும். பனி காலத்தில் மலர்ச்சி அதிகம் இருக்காது. வழக்கமாக ஜனவரி, பிப்ரவரியில் பனி குறைந்து, உற்பத்தி அதிகரிக்கும்.

ஆனால் இந்த முறை பனி குறையவில்லை. இரவு நேரத்தில் பனி அதிகமாக உள்ளது. அதனால் மல்லி வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது. இந்த மாத இறுதிக்குள், மல்லி விலை குறைய வாய்ப்பு உள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us