sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'தினமலர் - பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி பதில் சொல்வதில் வெளிப்படுத்திய வேகம்

/

'தினமலர் - பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி பதில் சொல்வதில் வெளிப்படுத்திய வேகம்

'தினமலர் - பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி பதில் சொல்வதில் வெளிப்படுத்திய வேகம்

'தினமலர் - பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி பதில் சொல்வதில் வெளிப்படுத்திய வேகம்


ADDED : டிச 01, 2024 01:21 AM

Google News

ADDED : டிச 01, 2024 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம்' இதழ் சார்பில் நடந்த பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா போட்டியில், மாணவ, மாணவியர் உற்சாகமாக பதில் தெரிவித்து, அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், 2018ம் ஆண்டு முதல் 'வினாடி--வினா' போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டுக்கான 'வினாடி-வினா விருது, 2024--25' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், கடந்த மாதம் 8ம் தேதி துவங்கியது.

இவர்களுடன், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது. 'கோ- ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில், பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு அரையிறுதி போட்டி நடக்கும்.இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதிப் போட்டி நடத்தப்படும். இறுதிப் போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியில், 1,800 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத் தேர்வு எழுதினர். அதிக மதிப்பெண் பெற்ற 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில், 'பி' அணியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர்கள் சாய் திலக், பவின்குமார் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் பங்கஜ், நிர்வாக மேலாளர் ஜெய்சிங், ஒருங்கிணைப்பாளர்கள் சுகன்யா, குர்மித் கவுர் ஆகியோர் பரிசு வழங்கினர்.






      Dinamalar
      Follow us