/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா
/
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா
ADDED : ஜூலை 27, 2025 11:16 PM

கோவை; அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா, ஜென்னி ரெசிடென்ஸி ஓட்டலில், நேற்று நடந்தது.
இதில், கோவையில் முழுமை திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்னோடி திட்டங்களை நடைமுறைப்படுத்திய, தமிழ்நாடு வீட்டுவசதி துறைக்கு பாராட்டு விழா, சிறந்த ரியல் எஸ்டேட் தொழில் முனைவோருக்கு விருது வழங்கும் விழா, கூட்டமைப்பு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் கோரிக்கை மாநாடு ஆகியன இடம்பெற்றன.
முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாவுதீன் பேசியதாவது:
ரியல் எஸ்டேட் தொழில் தற்போது நல்ல நிலையில் உள்ளது. ஜாதி, மத பேதமின்றி எல்லோரும் ஒரே இடத்தில் வாழும் அமைப்பை ஏற்படுத்தியிருப்பது ரியல் எஸ்டேட். இங்குள்ள கூட்டமைப்பு உறுப்பினர்கள், 'லயன்ஸ் கிளப்'களில் இருந்துகொண்டு பிறருக்கு உதவி வருகின்றனர்.
சமூக முன்னேற்றம் என்பது தொழில் துறை, கல்வி என எதுவாக இருந்தாலும், எல்லாவற்றிலும் பெண்கள் எப்போது சம பங்களிப்பு பெறுகிறார்களோ, அப்போதுதான் அந்த நாடு முன்னேற்றம் அடையும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தமிழ்நாடு மாநில தகவல் ஆணைய ஆணையாளர் பிரியகுமார், கூட்டமைப்பு நிறுவனர் ஹென்றி, தேசிய செயலாளர் செந்தில்குமார், தேசிய துணை செயலாளர் பாலசண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.