sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'மனதில் வருத்தமில்லாமல் இருப்பதுதான் ஒரு மனிதனின் உண்மையான சாதனை'

/

'மனதில் வருத்தமில்லாமல் இருப்பதுதான் ஒரு மனிதனின் உண்மையான சாதனை'

'மனதில் வருத்தமில்லாமல் இருப்பதுதான் ஒரு மனிதனின் உண்மையான சாதனை'

'மனதில் வருத்தமில்லாமல் இருப்பதுதான் ஒரு மனிதனின் உண்மையான சாதனை'


ADDED : ஜன 02, 2025 10:42 PM

Google News

ADDED : ஜன 02, 2025 10:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடவள்ளி; வடவள்ளி, பிருந்தாவன் ஹில் வியூவில் நடந்த நிகழ்ச்சியில், 'ஒரு மனிதன், தன் வாழ்நாளில் மனதில் வருத்தமில்லாமல் இருப்பதே சாதனை' என, ஆன்மிக சொற்பொழிவாளர் ரமணன் தெரிவித்தார்.

வடவள்ளி, லட்சுமி நகரில் உள்ள பிருந்தாவன் ஹில் வியூ சீனியர் சிட்டிசன் ஹோமில், புத்தாண்டு ஆன்மிக சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. சேஷாத்ரிநாதன் பரத்வாஜ் எழுதிய 'திருத்தொண்டர்களின் இறையனுபவம்' என்ற நூல் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சொற்பொழிவாளர் ரமணன் பேசுகையில், ''ஒரு மனிதனின் வாழ்வில், முக்கிய சாதனை என்பது, நீங்கள் பெற்ற விருதுகளோ, படித்துப் பெற்ற பட்டங்களோ, பணமோ இல்லை. நமது மனதில் எந்த வருத்தமும், இதயத்தில் எந்தவிதமான கீறல்களும் இல்லாததே உண்மையான சாதனை. நாமும் எதையும் துரத்தி செல்லக்கூடாது. நம்மையும் எதுவும் துரத்த நாம் அனுமதிக்க கூடாது. இதுதான் சாந்தி.

உலகமே நம்மை கைவிட்டாலும், நாம் நம்மை கைவிடாமல் இருப்பது தான் ஞானம். எப்போதும் எது உச்சமாக இருக்கிறதோ அந்த சத்தியத்தின் பெயர்தான் யோகம். அந்த சத்தியம் எப்போதும் என்னுள்ளேயே இருக்கிறது என்ற தெளிவின் பெயர் தான் ஞானம். அந்த சத்தியம் தான் நம்மை காக்க வேண்டும். அதைத்தான் நான் எப்போதும் பணிந்து கொண்டிருக்கிறேன் என்ற பாவனை தான் பக்தி.

ஒரு மனிதரையோ, பொருளையோ, சித்தாந்தத்தையோ ஆதாரமாக கொண்டு, அதன் மூலம்தான் நாம் மகிழ்ச்சியாக இருப்போம் என்றால் அது ஆபத்து. ஒரு மனிதன், பொருள், சித்தாந்தம் ஆகியவற்றிற்கு ஆயுள் உண்டு. எதற்கு ஆயுள் உள்ளதோ, அதற்கு பிணி உண்டு, தேய்மானம் உண்டு, மரணமும் உண்டு. அமைதி என்னுடைய இயல்பு, ஆனந்தம் அதன் வெளிப்பாடு என்ற நிலைப்பாட்டில் இருந்தால் எப்போதும், எந்த காரணமும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கலாம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us