sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கேட்டதும் கிடைத்தது வீடு வேண்டாம் என்றார் பெண்

/

கேட்டதும் கிடைத்தது வீடு வேண்டாம் என்றார் பெண்

கேட்டதும் கிடைத்தது வீடு வேண்டாம் என்றார் பெண்

கேட்டதும் கிடைத்தது வீடு வேண்டாம் என்றார் பெண்


ADDED : மே 26, 2025 11:55 PM

Google News

ADDED : மே 26, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் விஜயலட்சுமிக்கு, மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி உள்ளிட்ட, மூன்று குழந்தைகள் உள்ளனர். ஒரு குழந்தை தவிர, மற்ற இரு குழந்தைகளும் பள்ளிப்படிப்பை தொடர்கின்றனர்.

கணவர் கூலி வேலை செய்து வருகிறார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அருகே, கூரை வேய்ந்த தற்காலிக வீட்டில் வசிக்கிறார். மழைகாலத்தில் குடியிருக்க முடியாது; வெய்யில் காலத்தில் அனல் தகிக்கும் என்பதால், வீடு ஒதுக்கித்தருமாறு மாவட்ட வருவாய் அலுவலரிடம் விஜயலட்சுமி மனு கொடுத்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளிடம், மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதிகாரிகள் மனு மீது விசாரணை மேற்கொண்டு, கோவைபுதுார் குளத்துப்பாளையத்தில் வீடு தயார் நிலையில் இருப்பதாகவும், அங்கு ஒதுக்கி கொடுக்கலாமா என்றும் கேட்டனர்.

அதற்கு அப்பெண், தான் பிறந்து வளர்ந்த மேட்டுப்பாளையத்தில்தான் வீடு வேண்டும் என்றார். அதிகாரிகள் ஆவண செய்வதாக உறுதியளித்தனர்.






      Dinamalar
      Follow us