நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; திம்மநாயக்கன்புதூர், மகா பைரவர் கோவிலில் இன்று தேய்பிறை அஷ்டமி விழா நடக்கிறது.
அன்னுாரில் இருந்து மொண்டிபாளையம் செல்லும் வழியில், திம்மநாயக்கன்புதூரில் மகா பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமியன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இங்கு பைரவருக்கு என்று தனி கோவில் உள்ளதால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். இன்று இரவு 7:00 மணிக்கு, சிறப்பு வேள்வி பூஜை நடக்கிறது. இதையடுத்து, பைரவருக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடைபெறுகிறது.
'அனைவரும் பங்கேற்று இறையருள் பெறலாம்,' என விழா கமிட்டியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

