/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருப்பதோ இத்தனியூண்டு இட;ம் அதிலும் பயணிகள் படுத்து உறக்கம்
/
இருப்பதோ இத்தனியூண்டு இட;ம் அதிலும் பயணிகள் படுத்து உறக்கம்
இருப்பதோ இத்தனியூண்டு இட;ம் அதிலும் பயணிகள் படுத்து உறக்கம்
இருப்பதோ இத்தனியூண்டு இட;ம் அதிலும் பயணிகள் படுத்து உறக்கம்
ADDED : ஜூலை 14, 2025 11:37 PM

கோவை; கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை, காட்சிப் பொருளாகவே உள்ளன.
இந்நிலையில், ரயில்வே ஸ்டேஷனின் நுழைவாயில் பகுதி, தனிநபர்கள் உறங்குவதற்கும், நாய்களின் இருப்பிடமாகவும் மாறியுள்ளது. இதனால், பயணிகளுக்கு அசவுகரியம், பாதுகாப்பு குறைபாடு ஏற்படுவதாக, புகார் எழுந்துள்ளது.
அதேபோல், பிளாட்பார்ம், 5 மற்றும் 6 ஆகியவற்றில், லிப்ட் இயங்கவில்லை. இவற்றை சரி செய்ய கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் சார்பில், தெற்கு ரயில்வே மேலாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைப்பின் தலைவர் ஜெயராமன், தெற்கு ரயில்வே மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இப்பிரச்னையை உடனடியாக சரிசெய்ய வலியுறுத்தியுள்ளார்.