sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேர்தலில் போட்டியிடுவதை தவிர வேறு வழியில்லை; தொழில்துறையினர் குமுறல்

/

தேர்தலில் போட்டியிடுவதை தவிர வேறு வழியில்லை; தொழில்துறையினர் குமுறல்

தேர்தலில் போட்டியிடுவதை தவிர வேறு வழியில்லை; தொழில்துறையினர் குமுறல்

தேர்தலில் போட்டியிடுவதை தவிர வேறு வழியில்லை; தொழில்துறையினர் குமுறல்


ADDED : ஜூலை 02, 2025 08:26 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 08:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பு மாநில தலைவர் முத்துரத்தினம், மாநில பொதுச் செயலர் ஜெயபால் ஆகியோர், கோவையில் அளித்த பேட்டி:

நேற்று முதல், தொழில்துறைக்கான மின் கட்டணம், 3.16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 2022 முதல் தற்போது வரை, 63 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இது, தொழில்துறையை கடும் நெருக்கடிக்கு ஆளாக்குகிறது. பல மாநிலங்களை விட, தமிழகத்தில் மின் கட்டணம் மிக அதிகம். மேற்கூரை சோலார் அமைத்தால், அதற்கும் 'நெட்வொர்க்' கட்டணம் வசூலிக்கப்படுகிறது.வழக்குத் தொடர்ந்து, கோர்ட்டில் சாதகமாக தீர்ப்பு வந்தும், ஒரு நிறுவனத்தின் மீதான வழக்கைக் காட்டி, மின் வாரியம் மீண்டும் வசூலிக்கிறது. இதை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பசுமை எரி சக்தியை ஊக்குவிக்காமல், ரூ.1.58 லட்சம் கடனில் மூழ்கியுள்ள மின் வாரியம், அரசுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறது.

அரசியல் கட்சிகள் எங்களுக்கு ஆதரவாக இல்லை. அதனால், நாங்களே அரசியலில் இறங்க முடிவெடுத்துள்ளோம்.கடந்த லோக்சபா தேர்தலிலேயே, பாதிக்கப்பட்ட அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில், போட்டியிடும் முடிவை எடுத்தோம். தமிழக முதல்வர், தேர்தலுக்குப் பிறகு தீர்வு காண்பதாக கூறியிருந்தார்; தீர்வு எட்டப்படவே இல்லை.

எங்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் வேறென்ன செய்வது. நிர்பந்திக்கப்பட்டால், 2026 தேர்தலில் தொழில் அமைப்புகள் சார்பில் போட்டியிடுவோம்.

அதற்குள் முதல்வர் தலையிட்டு, மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். மின்வாரியத்துக்கு ஏற்படும் இழப்பை, அரசு ஏற்க வேண்டும். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை, கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us