sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குழாய் கூட இல்லை! அத்திக்கடவு திட்டத்தில் தாமதம்... குளங்களுக்கு நீர் விட எதிர்பார்ப்பு

/

குழாய் கூட இல்லை! அத்திக்கடவு திட்டத்தில் தாமதம்... குளங்களுக்கு நீர் விட எதிர்பார்ப்பு

குழாய் கூட இல்லை! அத்திக்கடவு திட்டத்தில் தாமதம்... குளங்களுக்கு நீர் விட எதிர்பார்ப்பு

குழாய் கூட இல்லை! அத்திக்கடவு திட்டத்தில் தாமதம்... குளங்களுக்கு நீர் விட எதிர்பார்ப்பு


ADDED : ஜன 28, 2025 11:42 PM

Google News

ADDED : ஜன 28, 2025 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார் : 'சோதனை ஓட்டம் துவங்கி, 22 மாதம் முடிந்தும், குழாய்கள் இணைப்பு கூட செய்யப்படவில்லை,' என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 1045 குளம், குட்டைகளில், நீர் நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி திட்டம் 1916 கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2023 மார்ச்சில் சோதனை ஓட்டம் துவங்கியது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை துவக்கி வைத்தார். எனினும் பல குளம், குட்டைகளுக்கு குழாய் கூட இணைக்கப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திம்மநாயக்கன்புதுார், கோனார்பாளையம் மற்றும் அய்யப்பன் பாளையம் விவசாயிகள் கூறியதாவது :

இந்தத் திட்டத்திற்காக இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பல போராட்டத்தில் பங்கேற்றோம். திட்டத்திற்கு அ.தி.மு.க., அரசு நிதி ஒதுக்கியது. 22 மாதங்களுக்கு முன்பு சோதனை ஓட்டம் துவங்கியது. ஆனால் எங்கள் பகுதியில் இதுவரை சில குளம் குட்டைகளுக்கு குழாய்கள் கூட இணைக்கப்படவில்லை. கோவை மாவட்டத்தின் எல்லையை ஒட்டி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பொங்கலூர் ஊராட்சி உள்ளது. இங்கு திம்மநாயக்கன்புதுாருக்கு வடபுறம் 10 ஏக்கர் பரப்பளவு உள்ள தாண்டான் குட்டைக்கு குழாய்கள் கூட இணைக்கப்படவில்லை. இத்துடன் மொண்டிபாளையம் செல்லும் வழியில் உள்ள குட்டையிலும் இதுவரை ஒரு சொட்டு நீர் கூட விடவில்லை. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அல்லப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த 10 ஏக்கர் பரப்பளவு உள்ள பெரிய குட்டைக்கும் தண்ணீர் வரவில்லை. திம்மநாயக்கன்புதுாரில் உள்ள எட்டு ஏக்கர் குட்டை, அல்லப்பாளையத்தில் உள்ள சுடுகாட்டு குளம் என பல குளம், குட்டைகளுக்கு தண்ணீர் விடவில்லை.

இந்தப் பகுதிக்கு ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள எம்மாம் பூண்டி நீரேற்று நிலையத்திலிருந்து தண்ணீர் பம்பிங் செய்யப்படுகிறது. ஏழு கி.மீ., தொலைவில் அன்னுார் அருகே குன்னததுாராம்பாளையத்தில் ஆறாவது நீர் ஏற்று நிலையம் இருக்கிறது. ஆனால் 40 கி.மீ., தொலைவில் உள்ள ஐந்தாவது நீரேற்று நிலையத்திலிருந்து எங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளனர். இதனால், பொங்கலுார், அல்லப்பாளையம் ஊராட்சிகளில், பெரும்பாலான குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வரவில்லை. சில குட்டைகளுக்கு தண்ணீர் விடுவதற்கான குழாய்கள் கூட இணைக்கப்படவில்லை. அரசு விரைவில் பொங்கலுார் மற்றும் அல்லப்பாளையம் ஊராட்சியில் உள்ள குளம், குட்டைகளுக்கு அத்திக்கடவு நீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோனார்பாளையத்தில் நான்கு ஏக்கர் பரப்பளவு உள்ள கூத்தான்குளம் இதில் விடுபட்டுவிட்டது எனவே இந்த குளத்தை சேர்க்க வேண்டும் என அப்போதைய கலெக்டர் ராஜாமணியிடம் மனு கொடுத்தோம். உடனடியாக அத்திக்கடவு அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தார்.ஆனாலும் அதிகாரிகள் இந்த குளத்தை சேர்க்கவில்லை இந்த குளத்தில் அத்திக்கடவு நீர் நிரப்பினால் சுற்றுவட்டாரத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல நூறு விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us