/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடை அரங்கநாதர் கோவிலில் மார்ச் 12ல் தேரோட்ட திருவிழா
/
காரமடை அரங்கநாதர் கோவிலில் மார்ச் 12ல் தேரோட்ட திருவிழா
காரமடை அரங்கநாதர் கோவிலில் மார்ச் 12ல் தேரோட்ட திருவிழா
காரமடை அரங்கநாதர் கோவிலில் மார்ச் 12ல் தேரோட்ட திருவிழா
ADDED : பிப் 17, 2025 10:34 PM
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகத் தேர்த்திருவிழா மார்ச் 5ம் தேதி இரவு கிராம சாந்தி பூஜையுடன் துவங்க உள்ளது. 6ம் தேதி கொடியேற்றமும், 7ம் தேதி சிம்ம வாகனம், 8ம் தேதி அனுமந்த வாகனம், 9ம் தேதி கருட வாகனத்தில் அரங்கநாத பெருமாள் சுவாமியின் திருவீதி உலா நடைபெற உள்ளது. பத்தாம் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும், 11ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், அன்று இரவு யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. 12ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருகிறார். அன்று மாலை, 4:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும், தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற உள்ளது.
13ம் தேதி குதிரை வாகனத்தில் பரிவேட்டையும், 14ம் தேதி சேஷ வாகனத்தில் தெப்போற்சவம், 15ம் தேதி சந்தான சேவை, சாற்றுமுறை உற்சவம் பூர்த்தியும், 16ம் தேதி வசந்தம் ஆகியவை நடைபெற உள்ளன.
விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சந்திரமதி, அறங்காவலர் குழுத் தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவஹர், குணசேகரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

