sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பதில் சொன்னார்கள்; பரிசு வென்றார்கள்! வினாடி - வினா போட்டியில் மாணவர்கள் அபாரம்

/

பதில் சொன்னார்கள்; பரிசு வென்றார்கள்! வினாடி - வினா போட்டியில் மாணவர்கள் அபாரம்

பதில் சொன்னார்கள்; பரிசு வென்றார்கள்! வினாடி - வினா போட்டியில் மாணவர்கள் அபாரம்

பதில் சொன்னார்கள்; பரிசு வென்றார்கள்! வினாடி - வினா போட்டியில் மாணவர்கள் அபாரம்


ADDED : அக் 30, 2025 12:19 AM

Google News

ADDED : அக் 30, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ். கல்வி குழுமம் மற்றும் கிப்ட் பார்ட்னர் சத்யா ஏஜன்சி இணைந்து நடத்தும் 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், குனியமுத்துார் சரஸ்வதி ராமச்சந்திரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியர் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.

மாணவர்களின் மொழியறிவு மட்டுமின்றி, அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் சிந்தித்தல், பகுத்தறிவு, பொது அறிவு போன்ற திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவு திறன்களையும் ஊக்குவித்து, படிப்பு மீது ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய வினாடி-வினா போட்டி, 'தினமலர்' நாளிதழ் சார்பில் தொடர்ந்து நடத்தப்படுகிறது.

அதன்படி, 'தினமலர்' நாளிதழின் 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ். கல்வி குழுமம் இணைந்து நடத்தும் வினாடி-வினா போட்டிக்கு, சத்யா ஏஜன்சீஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகியவை கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன.

கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறுவர்.

அதிலிருந்து தேர்வாகும் எட்டு அணிகள் இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

குனியமுத்துார் சரஸ்வதி ராமச்சந்திரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த தகுதி சுற்றில் 110 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ, மாணவியர் எட்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர்.

மூன்று சுற்றுகளாக நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், 'எச்' அணி முதல் பரிசு வென்றது. அந்த அணியில் இடம்பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி தெளஃபிகா மரியம் பாத்திமா மற்றும் எட்டாம் வகுப்பு மாணவி மோனிகா ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் யோகிதா ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.






      Dinamalar
      Follow us