ADDED : டிச 12, 2024 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, எம்மேகவுண்டம்பாளையம் வீரமாச்சி அம்மன் கோவிலில், கடந்த 9ம் தேதி திருக்குட நன்னீராட்டு விழா துவங்கியது. இதில், முளைப்பாரி எடுத்து வரப்பட்டு, சுவாமி தரிசனம் செய்யப்பட்டது.
கடந்த, 10ம் தேதி, முதல் கால வேள்வி, இசை விண்ணப்பம் மற்றும் திருவடி விண்ணப்பம் நடந்தது. 11ம் தேதி, மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் காலம் மற்றும் மூன்றாம் கால வேள்வி வழிபாடு நடந்தது.
நேற்று, திருக்காப்பு அணிவித்தல், நான்காம் கால வேள்வி நடந்தது. தொடர்ந்து விமான திருக்குட நன்னீராட்டு நடந்தது. இதில், பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், திருவிளக்கு பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நடந்தது.

