/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருப்பரங்குன்றம் விவகாரம்: மிளகாய் அரைத்து வழிபாடு
/
திருப்பரங்குன்றம் விவகாரம்: மிளகாய் அரைத்து வழிபாடு
திருப்பரங்குன்றம் விவகாரம்: மிளகாய் அரைத்து வழிபாடு
திருப்பரங்குன்றம் விவகாரம்: மிளகாய் அரைத்து வழிபாடு
ADDED : டிச 15, 2025 04:19 AM

பொள்ளாச்சி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான கோர்ட் உத்தரவை, தி.மு.க., அரசு அமல்படுத்த வேண்டி, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், மிளகாய் அரைத்து வழிபாடு செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில், கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், தி.மு.க., அரசு அமல்படுத்தவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோர்ட் அவமதிப்பு வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. அதேநேரம், தீர்ப்பை அமல்படுத்தக்கோரியும், அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்தும், தமிழகத்தின் பல பகுதிகளில், ஹிந்து அமைப்புகளை சேர்ந்தோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு பகுதியாக, 'ஹிந்து மக்கள் கட்சி தமிழகம்' மாநில அமைப்பு செயலாளர் கணேஷ்பாபு, மாநில செயலாளர் ரமணன் ஆகியோர், கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், மிளகாய் அரைத்து, அம்மனிடம் முறையீடு செய்து வழிபாடு நடத்தினர்.

