நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் : சூலுார் மேற்கு அங்காளம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
நொய்யல் தாய் மீண்டும் நல்ல நிலையில் பெருக்கெடுத்து ஓடவும், விவசாயம் தழைக்கவும், நீர் நிலைகளை நல்ல முறையில் பராமரிக்கும் எண்ணத்தை மக்களுக்கு கொடுக்கவும் வேண்டி முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
இதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள், பக்தர்கள் பங்கேற்று திருவாசகத்தை பாராயணம் செய்தனர்.