/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலமலை ரங்கநாதர் கோயிலுக்கு தோரண வாயில்
/
பாலமலை ரங்கநாதர் கோயிலுக்கு தோரண வாயில்
ADDED : நவ 09, 2025 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை மலையடிவாரத்தில், புதிய தோரண வாயில் திறப்பு விழா, நாளை நடக்கிறது.
கோவை வடக்கு பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில், பாலமலை ரங்கநாதர் திருக்கோயில் உள்ளது. ராமானுஜர் வருகை தந்த சிறப்பு பெற்ற இக்கோயில் மலையடிவாரத்தில், 10 லட்ச ரூபாய் செலவில், புதிய தோரண வாயில் கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நாளை காலை, 9.00 மணிக்கு நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகள் பாலமலை ரங்கநாதர் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீஷ் தலைமையில் நடந்து வருகிறது.

