sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிகிச்சை பெற வருவோர் நிழற்குடையின்றி தவிப்பு

/

சிகிச்சை பெற வருவோர் நிழற்குடையின்றி தவிப்பு

சிகிச்சை பெற வருவோர் நிழற்குடையின்றி தவிப்பு

சிகிச்சை பெற வருவோர் நிழற்குடையின்றி தவிப்பு


ADDED : செப் 20, 2024 10:23 PM

Google News

ADDED : செப் 20, 2024 10:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில், நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள், நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

கோவை சிங்காநல்லுாரில் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கோவை மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொழிலாளர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

அவர்களின் வசதிக்காக மருத்துவமனையின் முன் பகுதியில், பஸ் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், பாதாள சாக்கடை அமைக்க அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள், நடைபாதைகள் மற்றும் நிழற்குடை அகற்றப்பட்டன.

பாதாள சாக்கடை அமைத்து நீண்ட நாட்கள் கடந்தும், அகற்றப்பட்ட நிழற்குடை மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் நோயாளிகளும், அப்பகுதி மக்களும் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல், அவதி அடைந்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us