/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாதிக்க நினைப்பவர்சாக்கு போக்கு சொல்லக் கூடாது
/
சாதிக்க நினைப்பவர்சாக்கு போக்கு சொல்லக் கூடாது
ADDED : ஜன 20, 2025 11:16 PM

மேட்டுப்பாளையம்; காரமடை எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், இரண்டு நாட்கள் ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி தாளாளர் பழனிசாமி தலைமை வகித்து பேசுகையில், பிளஸ் டூ பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், பத்தாம் வகுப்பு  பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறுபவருக்கு, 50 ஆயிரம் ரூபாயும் பரிசு தொகை வழங்கப்படும்,  என்றார்.
தேர்வில் முதல் மூன்று இடங்களை  பெற்ற, மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கிய,தன்னம்பிக்கை பேச்சாளர் ஷியாமளா ரமேஷ்பாபு பேசியதாவது:
மாணவர்களாகிய உங்களுக்கு, கவனச் சிதறல் இருக்கக் கூடாது. இந்த சமுதாயம் போற்றும் நபராக நீங்கள் வரவேண்டும். சாதிக்க நினைத்தால் சாக்கு, போக்கு சொல்வதை நிறுத்த வேண்டும்.சாக்கு சொன்னால் சாதிக்க முடியாது.  உங்களால் ஆசிரியர்களும், பெற்றோர்களும் பெருமை அடைய வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளி முதல்வர் சசிகலா வரவேற்றார். செயலாளர் ராஜேந்திரன், நிர்வாக அறங்காவலர் தாரகேஸ்வரி முன்னிலை வகித்தனர். இரண்டு நாளும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.  பள்ளி நிர்வாக அலுவலர் சிவசதீஷ்குமார் நன்றி கூறினார்.

