/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விற்பனைக்காக 'கள்' வைத்திருந்தவர்கள் கைது
/
விற்பனைக்காக 'கள்' வைத்திருந்தவர்கள் கைது
ADDED : மார் 17, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, அருகே விற்பனைக்காக 'கள்' வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சியில் சட்டவிரோதமாக 'கள்' இறக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தொடர்ந்து சொக்கனூரில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மாரிமுத்து, 60, விவசாயி என்பவரிடம், 8 லிட்டர் கள் மற்றும் கந்தசாமி, 63, விவசாயி என்பவரிடம் இருந்து 8 லிட்டர் கள் என மொத்தம் 16 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இருவரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்.